பதிவு செய்த நாள்
27 நவ2013
00:13
புதுடில்லி: மத்திய அரசு, சர்க்கரை ஆலைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.உள்நாட்டில், சர்க்கரை விலை குறைந்து வரும் அதேநேரத்தில், சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இதனால், இத்துறை நிறுவனங்கள் கடும் இடர்பாட்டை சந்தித்து வருகின்றன.
உணவு அமைச்சகம்இதை கருத்தில் கொண்டு, மத்திய உணவு அமைச்சகம், சர்க்கரை ஆலைகளுக்கு, வட்டி இல்லாமல் கடன் வழங்கும் வகையில், முக்கிய அமைச்சரவை குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக, உணவு அமைச்சகத்தின் செயலர் சுதிர் குமார் தெரிவித்தார்.அண்மையில், மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற, முக்கிய அமைச்சரவை குழு கூட்டத்தில், சர்க்கரை துறை சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய சர்க்கரை ஆலைகள், கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதால், வங்கிகள், இத்துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், வங்கிகள், இத்துறை நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் நிலையில், சர்க்கரை மேம்பாட்டு நிதியத்திலிருந்து, கடனுக்கான வட்டி வழங்கப்படும்.மேம்பாட்டு நிதியம்தற்போது, சர்க்கரை மேம்பாட்டு நிதியத்தின் இருப்பில், 1,200 கோடி ரூபாய் உள்ளது.சர்க்கரை ஆலைகள், கடந்த இரண்டு பருவத்தில், அரசுக்கு செலுத்தியுள்ள, உற்பத்தி வரியின் அடிப்படையில், இரண்டாண்டு காலத்திற்கு, 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கினால், அதற்கான, 380 – 400 கோடி ரூபாய் வட்டி, மேற்கண்ட நிதியத்திலிருந்து வழங்கப்படும்.
உற்பத்தி:உள்நாட்டு தேவையை விட, சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால், இத்துறை நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.இந்நிலையில், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, கடந்தாண்டு, 3,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தியில், இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில், ஒரு குவிண்டால் கரும்பிற்கான ஆதரவு விலை, 280 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால், சர்க்கரை ஆலைகள், ஒரு குவிண்டாலுக்கு, 225 ரூபாய்க்கு மேல் கொடுக்க இயலாது என, கூறி வருகின்றன.
நடப்பு 2013 – 14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.தேவைகடந்த பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.45 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், சர்க்கரைக்காகன தேவை, 2.20 கோடி டன் என்ற அளவில் தான் உள்ளது.சர்க்கரை ஆலைகளின், நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இத்துறை நிறுவனங்களுக்கு, வட்டி இல்லாமல், வங்கிகளில் இருந்து கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக, சுதிர் குமார் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|