‘எரி­வாயு விலை உயர்வை திரும்ப பெறும் திட்­ட­மில்லை’‘எரி­வாயு விலை உயர்வை திரும்ப பெறும் திட்­ட­மில்லை’ ... ஏழு­ம­லையான் வரு­மா­னத்தை உயர்த்த புதிய உத்தி ஏழு­ம­லையான் வரு­மா­னத்தை உயர்த்த புதிய உத்தி ...
சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
00:13

புது­டில்லி: மத்­திய அரசு, சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.உள்­நாட்டில், சர்க்­கரை விலை குறைந்து வரும் அதே­நே­ரத்தில், சர்க்­கரை ஆலை­களின் உற்­பத்தி செல­வினம் அதி­க­ரித்­துள்­ளது. இதனால், இத்­துறை நிறு­வ­னங்கள் கடும் இடர்­பாட்டை சந்­தித்து வரு­கின்­றன.
உணவு அமைச்சகம்இதை கருத்தில் கொண்டு, மத்­திய உணவு அமைச்­சகம், சர்க்­கரை ஆலை­க­ளுக்கு, வட்டி இல்­லாமல் கடன் வழங்கும் வகையில், முக்­கிய அமைச்­ச­ரவை குழு­விற்கு பரிந்­துரை செய்­துள்­ள­தாக, உணவு அமைச்­ச­கத்தின் செயலர் சுதிர் குமார் தெரி­வித்தார்.அண்­மையில், மத்­திய வேளாண் அமைச்சர் சரத்­பவார் தலை­மையில் நடை­பெற்ற, முக்­கிய அமைச்­ச­ரவை குழு கூட்­டத்தில், சர்க்­கரை துறை சந்­தித்து வரும் பிரச்­னைகள் குறித்து பேசப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­திய சர்க்­கரை ஆலைகள், கடும் நிதி நெருக்­க­டிக்கு உள்­ளாகி உள்­ளதால், வங்­கிகள், இத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்க தயக்கம் காட்டி வரு­கின்­றன.
இந்­நி­லையில், வங்­கிகள், இத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் கொடுக்கும் நிலையில், சர்க்­கரை மேம்­பாட்டு நிதி­யத்­தி­லி­ருந்து, கட­னுக்­கான வட்டி வழங்­கப்­படும்.மேம்பாட்டு நிதியம்தற்­போது, சர்க்­கரை மேம்­பாட்டு நிதி­யத்தின் இருப்பில், 1,200 கோடி ரூபாய் உள்­ளது.சர்க்­கரை ஆலைகள், கடந்த இரண்டு பரு­வத்தில், அர­சுக்கு செலுத்­தி­யுள்ள, உற்­பத்தி வரியின் அடிப்­ப­டையில், இரண்­டாண்டு காலத்­திற்கு, 3,000 கோடி ரூபாய் கடன் வழங்­கினால், அதற்­கான, 380 – 400 கோடி ரூபாய் வட்டி, மேற்­கண்ட நிதி­யத்­தி­லி­ருந்து வழங்­கப்­படும்.
உற்பத்தி:உள்­நாட்டு தேவையை விட, சர்க்­கரை உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளதால், இத்­துறை நிறு­வ­னங்கள் கடும் நிதி நெருக்­க­டிக்கு ஆளா­கி­யுள்­ளன.இந்­நி­லையில், சர்க்­கரை ஆலைகள், விவ­சா­யி­க­ளுக்கு வழங்க வேண்­டிய நிலுவை தொகை, கடந்­தாண்டு, 3,400 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.உள்­நாட்டில் சர்க்­கரை உற்­பத்­தியில், இரண்டாம் இடத்தில் உள்ள உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில், ஒரு குவிண்டால் கரும்­பிற்­கான ஆத­ரவு விலை, 280 ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.ஆனால், சர்க்­கரை ஆலைகள், ஒரு குவிண்­டா­லுக்கு, 225 ரூபாய்க்கு மேல் கொடுக்க இய­லாது என, கூறி வரு­கின்­றன.
நடப்பு 2013 – 14ம் சந்­தைப்­ப­டுத்தும் பரு­வத்தில், நாட்டின் சர்க்­கரை உற்­பத்தி, 2.50 கோடி டன்­னாக இருக்கும் என, சர்க்­கரை ஆலைகள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளன.தேவைகடந்த பரு­வத்தில், சர்க்­கரை உற்­பத்தி, 2.45 கோடி டன்­னாக இருந்­தது. அதே­ச­மயம், சர்க்­க­ரைக்­கா­கன தேவை, 2.20 கோடி டன் என்ற அளவில் தான் உள்­ளது.சர்க்­கரை ஆலை­களின், நிதி நெருக்­க­டியை கருத்தில் கொண்டு, மத்­திய அரசு, இத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு, வட்டி இல்­லாமல், வங்­கி­களில் இருந்து கடன் வழங்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக, சுதிர் குமார் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)