பதிவு செய்த நாள்
27 நவ2013
00:13
திருப்பதி: திருமலை ஏழுமலையானின் வருமானத்தை உயர்த்த, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை, செயல்படுத்த உள்ளது.திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கை மற்றும் இதர வருமானங்களை, வங்கிகளில், தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது.தினசரி மாறி வரும், வட்டி விகிதத்தை கருத்தில் கொண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, வைப்பு நிதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும், டெபாசிட் செய்யப் படுகிறது.700 கோடி முதலீடுஇந்நிலையில், கடந்த மாதம், வைப்பு நிதி முதிர்வடைந்தது.
இதனுடன், ஏழுமலையான் உண்டியல் மூலம் கிடைத்த வருமானத்தையும் இணைத்து, 700 கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்ய, தேவஸ்தானம் முடிவு செய்தது.இதை அறிந்த, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஆகியவற்றுக்கு இடையே, டெபாசிட்டை பெறுவதில் கடும் போட்டி உருவானது.தற்போது வரை, வங்கிகள், டெபாசிட்டுக்கு குறைந்த பட்சமாக, 9.5 சதவீதம் முதல், அதிகபட்சமாக, 9.7 சதவீதம் வரை, வட்டி அளிக்கின்றன. ஆனால், தன் முதலீட்டிற்கு தக்கவாறு, வட்டி விகிதத்தை, உயர்த்த நினைத்த தேவஸ்தானம், புதிய வழியை பின்பற்றுகிறது.மற்ற வியாபாரத்தை போல், ஒப்பந்தபுள்ளி மூலம், வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது, ரிசர்வ் வங்கியின் சட்டப்படி குற்றம்.அதனால், வங்கிகளிடையே போட்டியை ஏற்படுத்தி, தேவஸ்தானம் லாபம் பெற நினைத்தது. தேவஸ்தானத்தின், நிதி ஆலோசகரும், வருவாய்த்துறையின் முக்கிய அதிகாரியுமான பாலாஜி, வங்கிகளிடம் தனித்தனியே, பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில், 10.08 சதவீத வட்டிக்கு ஒரு வங்கியிடம், ஒப்பந்தம் செய்துள்ளதாக, அதிகார வட்டாரங்கள், தெரிவிக்கின்றன.
அனைத்து வங்கிகளும், இந்த வட்டி விகிதத்தை, ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், கடந்த மூன்று மாதங்களில், கிடைத்த உண்டியல் வருமானத்தை பிரித்து, அனைத்து வங்கிகளிலும் முதலீடு செய்வதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.இல்லையென்றால், புதிய வட்டிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட வங்கியிலேயே அனைத்து முதலீடுகளையும், தொடர முடிவு செய்துள்ளது.4 கோடி வருமானம்கடந்த ஆண்டை விட, இம்முறை, வட்டி விகிதம் 0.58 சதவீதம் அதிகரித்துள்ளதால், 700 கோடி ரூபாயை, முதலீடு செய்வதன் மூலம், கூடுதலாக, 4.06 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.இதே தொகைக்கு கடந்த முறை, 66.50 கோடி ரூபாய் வட்டியாக கிடைத்தது. புதிய திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டு, 70.56 கோடி ரூபாய், வட்டி கிடைக்கும், என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|