பதிவு செய்த நாள்
27 நவ2013
00:15
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் தர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, எரிவாயு, நுகர்பொருட்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், பொறியியல், மின்சாரம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 180.06 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,425.02 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,604.27 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,390.62 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, ஐ.டி.சி., உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பீ.எச்.இ.எல்., டாட்டா மோட்டார்ஸ், சேசா ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 56.25 புள்ளிகள் சரிவடைந்து, 6,059.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,112.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,047.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|