ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ... பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் – மான்டேக் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் – மான்டேக் ...
வசூலாகாத கடன்: சுய உதவி குழுக்களின் பங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2013
00:22

வாழ்க்கையில் முன்னேறுவதற்காக, வங்கிகளிடம் இருந்து பெறும் கடனை, சுய உதவிக் குழுக்கள். திரும்பச் செலுத்துவது குறைந்து வருகிறது.
நுண்கடன்: அதற்கேற்ப, 'சென்ற 2012–13ம் நிதியாண்டில், வங்கிகளின் வசூலாகாத கடனில், சுய உதவிக் குழுக்களின் பங்கு, 7.04 சதவீதமாக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது' என, நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.1980களின் துவக்கத்தில், நுண் கடன் நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம், சுய உதவிக் குழுவினர் அதிக வட்டிக்கு கடன் பெற்று, இடர்பாட்டிற்கு ஆளாயினர்.
இதையடுத்து, கடந்த 1987ம் ஆண்டு, சுய உதவிக்குழுவினருக்கு, குறைந்த வட்டியில், வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, நபார்டு வங்கி முயற்சி மேற்கொண்டது.கடந்த 1989ம் ஆண்டு, இத்திட்டம் அமலுக்கு வந்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், குறைந்த வட்டியில் கடன் வழங்கியதை அடுத்து, சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரம் முன்னேறியது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சுய உதவிக் குழுவினர், வங்கிகளில் வாங்கிய டனை சரிவர திரும்பச் செலுத்தாத நிலை காணப்படுகிறது.இதனால், வங்கிகளின் வசூலாகாத கடனில், சுய உதவிக் குழுவினரின் பங்கு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த, 2012–13ம் நிதியாண்டு நிலவரப்படி, சுய உதவிக் குழுக்கள் வாயிலான, வங்கிகளின் வசூலாகாத கடன், முந்தைய நிதியாண்டை விட, 26 சதவீதம் அதிகரித்து, 2,213 கோடியில் இருந்து, 2,787 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், சுய உதவிக் குழுக்களின் வசூலாகாத கடன், 6.09 சதவீதத்தில் இருந்து, 7.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடன் இலக்கு: இதற்கு வங்கிகளின் கடன் இலக்கு அதிகரிப்பு, சொத்துக்களை சீராய்வதில் கவனமின்மை போன்றவை காரணமாகும்.இதற்கெல்லாம் மேலாக, சுய உதவிக் குழுக்களை, வறுமை ஒழிப்பு கருவியாக பார்க்கும் அரசின் கொள்கையும், வசூலாகாத கடன் அதிகரிப்பிற்கு காரணம் என, நபார்டு வங்கி யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு சுய உதவிக் குழுவினர் பெறும்கடன்கள் திடீரென்று அதிகரிக்கும் போது, அதை சமாளிக்க, கடன் வழங்கும் வங்கிகள் நிர்வாகரீதியில் தயாராவதில்லை.இதனால், வழங்கப்பட்ட கடன்கள் குறித்து, அவ்வப்போது வங்கிகள் கண்காணிப்பதில்லை. ஒரு சில சமயங்களில், வழங்கிய கடன்களை கண்காணிக்க வேண்டும் என்பதையே வங்கிகள் மறந்து விடுகின்றன என, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)