வசூலாகாத கடன்: சுய உதவி குழுக்களின் பங்கு உயர்வுவசூலாகாத கடன்: சுய உதவி குழுக்களின் பங்கு உயர்வு ... கம்ப்யூட்டர் விற்பனையில் வளர்ச்சி கம்ப்யூட்டர் விற்பனையில் வளர்ச்சி ...
பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக உயரும் – மான்டேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2013
00:24

ஐதராபாத்: வரும், 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக அதிகரிக்கும் என, மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நாடு படிப்படியாக பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபட்டு வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டை காட்டிலும், இரண்டாவது அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசின் கொள்கை திட்டங்களை பொறுத்து, வரும், 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக உயரும்.கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக குறைந்து போனது.
இந்நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாக, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஜனவரிமுதல் மார்ச் வரையிலான காலாண்டில்,4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், இது, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில், 5.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 – 2.7 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னியச் செலாவணி வரத்துக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறையாகும். எனவே, உள்நாட்டில், அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு, அலுவாலியா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)