பதிவு செய்த நாள்
29 நவ2013
00:23
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதியாண்டின், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த, இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதமாக அதிகரித்திருக்கும் என, 'அசோசெம்' மதிப்பிட்டுள்ளது.இந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் பரவலாக பெய்த மழையால், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், வேளாண் உற்பத்தி சிறப்பாக உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சிக்கு துாண்டுகோலாக இருக்கும்.மதிப்பீட்டு காலத்தில், வேளாண் துறை வளர்ச்சி, 4.25 சதவீதமாகவும், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி, முறையே, 3 மற்றும் 7 சதவீதமாகவும் இருக்கும்.செலவினத்திற்கும், தேவை குறைவிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க, வேளாண்துறை வளர்ச்சி உதவும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அரசின் அறிக்கை, இன்று வெளிவருகிறது. அதற்கு முன்பாக 'அசோசெம்' அதன் மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|