ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 குறைவு ... வங்கிகளின் உணவுசாரா கடன்மிதமான அளவில் வளர்ச்சி வங்கிகளின் உணவுசாரா கடன்மிதமான அளவில் வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.6,118 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2013
00:27

கொச்சி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,118 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இது, கடந்த 2012-13ம் நிதிஆண்டின், இதே காலத்தில், 4,286 கோடி ரூபாயாக இருந்தது. அமெரிக்கா: இதே காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 31 சதவீதம் அதிகரித்து, 78.74 கோடியிலிருந்து, 103.11 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 20 சதவீதம் அதிகரித்து, 3.15 லட்சம் டன்னிலிருந்து, 3.79 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மிளகு, ஏலக்காய், தனியா, சீரகம், ஜாதிக்காய், புதினா பொருட்கள் உள்ளிட்டவை, அதிக அளவில் ஏற்றுமதியானதால், ஒட்டு மொத்த நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, அதிகரித்துள்ளது.இந்திய நறுமணப் பொருட்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன. மதிப்பீட்டு காலத்தில், மிளகு ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 37 சதவீதம் அதிகரித்து, 310 கோடியிலிருந்து, 423 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,515 டன்னிலிருந்து, 10,200 டன்னாக அதிகரித்து உள்ளது. சிறிய வகை ஏலக்காய் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே, 51 சதவீதம் (797டன்னிலிருந்து, 1,205 டன்) மற்றும், 30 சதவீதம் (75 கோடியிலிருந்து, 97 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. ஏலக்காய்:அதேசமயம், பெரிய வகை ஏலக்காய் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 53 சதவீதம் மற்றும் 43 சதவீதம் சரிவை கண்டுள்ளது. மிளகாய் வற்றல்: ஏற்றுமதி, 1.38 லட்சம் டன்னிலிருந்து, 1.34 லட்சம் டன்னாக குறைந்துள்ள போதிலும், மதிப்பின் அடிப்படையில் 6 சதவீதம் (1,122 கோடியிலிருந்து, 1,194 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இஞ்சி:இஞ்சி ஏற்றுமதி, 81 கோடி ரூபாயிலிருந்து, 91 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ள போதிலும், அளவின் அடிப்படையில், 11,877 டன்னிலிருந்து, 5,550 டன்னாக சரிவடைந்துஉள்ளது.மஞ்சள் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், முறையே 37 சதவீதம் (231 கோடியிலிருந்து, 317 கோடி ரூபாய்) மற்றும் 2 சதவீதம் (37,736 டன்னிலிருந்து, 38,500 டன்) உயர்ந்துள்ளது. தனியா ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 117 சதவீதம் உயர்ந்து,
79 கோடியிலிருந்து (15,246 டன்), 172 கோடி ரூபாயாக (21,300 டன்) அதிகரித்துள்ளது. சீரகம் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், தலா, 93 சதவீதம் உயர்ந்துள்ளது.பூண்டு ஏற்றுமதி, 11,764 டன்னிலிருந்து, 7,500 டன்னாக சரிவடைந்துள்ளது. என்றாலும், இது, மதிப்பின் அடிப்படையில், 8 சதவீதம் உயர்ந்து, 32 கோடியிலிருந்து, 34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. புதினா பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 158 சதவீதம வளர்ச்சி கண்டு, 4,130 டன்னிலிருந்து (792 கோடி ரூபாய்), 10,650 டன்னாக ( 1,334 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. ஜாதிக்காய்:கணக்கீட்டு காலத்தில், வெந்தயம். கறிமசாலா பொடி, ஜாதிக்காய், நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின்ஸ் போன்றவற்றின் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கஅளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)