பதிவு செய்த நாள்
29 நவ2013
00:30
மும்பை:வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், நவம்பர் 15ம் தேதி வரையிலுமாக, ஒட்டு மொத்த அளவில், 55,48,126 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 47,84,325 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 15.96 சதவீதம் என்ற அளவில் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.
இதே காலத்தில், வங்கிகள் திரட்டிய ஒட்டு மொத்த டெபாசிட், 15.35 சதவீதம் அதிகரித்து, 64,06,213 கோடியிலிருந்து, 73,89,751 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், குறித்த கால டெபாசிட், 15.90 சதவீதம் உயர்ந்து, 58,10,395 கோடியிலிருந்து, 67,34,189 கோடி ரூபாயாகவும், டிமாண்ட் டெபாசிட், 10.03 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,95,817 கோடியிலிருந்து, 6,55,557 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள், புதிய திட்டங்கள், விரிவாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை தள்ளி வைத்துள்ளன. இதனால், அடுத்த இரண்டு மாதங்களில், நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும்.அதேசமயம், வேளாண் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள், சில்லரை விற்பனை துறைகளுக்கான, கடன் வளர்ச்சி நன்கு இருக்க வாய்ப்பு உள்ளது" என, பேங்க் ஆப் பரோடா நிர்வாக இயக்குனர் பி.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|