பதிவு செய்த நாள்
29 நவ2013
00:34
சென்ற அக்டோபரில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 5.50 லட்சம் முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்.அந்த மாதத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்', 21ஆயிரம் புள்ளிகளை கடந்தது.பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. இந்த சாதகமான தருணத்தை பயன்படுத்திக் கொண்ட முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, நிகர அளவில், 3,542 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.சென்ற அக்டோபர், 31ம் தேதி நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள்,1.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகித்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக, கடன் பத்திர முதலீடுகளை விட, பங்கு சார்ந்த முதலீடுகள் மீதான வருவாய் குறைவாகவே இருந்து வந்தது. அதனால், பங்குச் சந்தைகள் எழுச்சி காணும்போதெல்லாம், பங்கு சார்ந்த பரஸ்பர திட்டத்தில் கணக்கை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றனர்.
இவ்வாறு வெளியேறும் பணம், வங்கி டெபாசிட்டாகவோ அல்லது நிலையான வருவாய் தரும் பரஸ்பர நிதி திட்டங்களிலோ மறு முதலீடு செய்யப்படுகிறது.
மேற்கண்ட முதலீடுகள், 8.5–10 சதவீத வருவாயை வழங்குகின்றன.பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த, 2007–08ம் நிதியாண்டு முதல் தற்போது வரை, பரஸ்பர நிதி துறை, கிட்டத்தட்ட, 1 கோடிக்கும் அதிகமாக, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீட்டு கணக்குகளை இழந்துள்ளது.கடந்த 2012ம் ஆண்டு துவக்கத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 3.84 கோடி கணக்குகள் இருந்தன. இது, தற்போது, 3.06 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த, 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் வளர்ச்சி, 90 சதவீதம் அல்லது 80 லட்சம் கணக்குகள் என்ற அளவில் இருந்தது. கடந்த 2006–07ம் நிதியாண்டில், மேலும், 80 லட்சம் கணக்குகள் சேர்ந்து, மொத்தம், 2.53 கோடி கணக்குகளாக உயர்ந்தது.பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த, 2007–08ம் நிதியாண்டில் மட்டும், 1.24 கோடி புதிய கணக்குகள் துவங்கப்பட்டன என்பது, குறிப்பிடத்தக்கது.
தற்ேபாது, 3- - 5 ஆண்டுகள் முதிர்வை கொண்ட, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களை, நிறுவனங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து–
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|