பதிவு செய்த நாள்
29 நவ2013
10:20
மும்பை : வாரத்தின் கடைசி நாளான இன்று(நவ., 29ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 245.15 புள்ளிகள் உயர்ந்து 20,780.06-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 75.25 புள்ளிகள் உயர்ந்து 6,167.10-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சி குறித்த இரண்டாம் காலாண்டு வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.35 சதவீதம் உயர்ந்து, ஜப்பானின் நிக்கி 0.07 சதவீதம் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|