பதிவு செய்த நாள்
29 நவ2013
10:38
சென்னை : தமிழ்நாட்டில் அனைத்து ரெயில் பயணிகளுக்கும் ரெயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் (9962500500 கட்டணமில்லாதது) சேவையை வோடபோன் அளித்துள்ளது. இந்த வசதியை இதுவரை 3.3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். பயணத்தின் போது ஒவ்வொரு பயணியும் அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக ரெயில்வே போலீசாரால் நிர்வகிக்கப்படும் இந்த அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களின் பெட்டிகளிலும் நுழைவாயில் அருகே இந்த ஹெல்ப்லைன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும்போது பயணி இந்த ஹெல்ப்லைன் எண்ணை (9962500500) அழைக்க வேண்டும். இந்த அழைப்பு அந்த ரெயிலிலேயே பயணித்துக் கொண்டிருக்கும் ரெயில்வே காவலருக்கு திருப்பிவிடப்படும். வோடபோன் அனைத்து காவலர்களுக்கும் ஹேண்ட்செட்களை இலவசமாக அளித்துள்ளது. இதனால் காவலர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த முயற்சி முற்றிலும் ரெயில்வே போலீசால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சி தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதுடன் இந்த உதவிக்காக வோடபோன் நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் 40 நடமாடும் கியோஸ்க்களை ஒலிபெருக்கிகளுடன் அளித்துள்ளோம். இதனை போலீசார் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ரெயில்வே போலீஸ் ஹேண்ட்செட்டுக்கும் மாதந்தோறும் 1,20,000 இலவச வினாடிகள் அழைப்புகள் அளிக்கப்படுகிறது. மேலும் பிரதான கால் சென்டர் லைனையும் வோடபோன் அளித்துள்ளது. அதிக பயணிகள் செல்லும் பருவங்களின்போது போலீசார் பாதுகாப்பு குறித்த இயக்கங்களை அனைத்து நிலையங்களிலும் மேற்கொள்கின்றனர். இதற்கான உதவிகளை வோடபோன் இலவசமாக அளிக்கிறது.
இந்த சேவை கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோராயமாக நாளன்றுக்கு 150 முதல் 200 அழைப்புகள் இந்த ஹெல்ப்லைனுக்கு வருகிறது. அதாவது கடந்த ஆறு ஆண்டுகளில் 3.3 லட்சம் அழைப்புகள் இதுவரை இந்த எண்ணுக்கு வந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|