பதிவு செய்த நாள்
30 நவ2013
00:56
புதுடில்லி;'பணவீக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியாது; அதற்கு சில காலம் ஆகும்' என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.டெல்லியில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது:வரும், 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாகவும், 2015 –16ம் நிதியாண்டில், 7 சதவீதமாகவும் உயரும்.
நாட்டின் தற்போதைய இறுக்கமான சூழல் விடுபட்டு, மீண்டும் 8 சதவீதம் என்ற அளவில், உயர்ந்த வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் வரிக் கொள்கைகள், வரி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்த உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மூலதனச் சந்தை, நிதித் துறை ஆகியவை, சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகள், அடுத்த, 6 மாதங்களுக்குள் நீக்கப்படும். எரிவாயு மற்றும் எண்ணெய்க்கு விலை நிர்ணயிக்க வேண்டும். நிலக்கரி துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதன் மூலம், நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|