பதிவு செய்த நாள்
02 டிச2013
06:09
குன்னுார்:நடப்பாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான முதல் 10 மாத காலத்தில், சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி, 164.90 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது,கடந்தாண்டு இதே காலத்தில், 152 கோடி கிலோவாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு காலத்தில், சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி, 8.52 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கென்யாவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 6.23 கோடி கிலோ அதிகரித்து, 31 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், உகாண்டா நாட்டில் இதன் உற்பத்தி, 11 லட்சம் கிலோ குறைந்துள்ளது. இந்தியாவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 5.36 கோடி கிலோ உயர்ந்து, 86.16 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், இலங்கையில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 83 லட்சம் கிலோ உயர்ந்து, 27.82 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
மாலவியில், இதன் உற்பத்தி, 26 லட்சம் கிலோ அதிகரித்து, 3.96 கோடி கிலோவாகவும், வங்கதேசத்தில், 16 லட்சம் கிலோ உயர்ந்து, 5.10 கோடி கிலோவாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. மேற்கண்ட தகவலை, தேயிலை வாரியம் மற்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு ெவளியிட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|