புதிய வங்கி துவங்குவதிலிருந்து நிறுவனங்கள் ஓட்டம்:ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளால்புதிய வங்கி துவங்குவதிலிருந்து நிறுவனங்கள் ஓட்டம்:ரிசர்வ் வங்கியின் ... ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.31 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.31 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி சேமிப்பு கணக்கிற்கு காலாண்டிற்குள் வட்டி வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2013
06:12

மும்பை:வங்கிகள், வாடிக்கையாளர் களின் சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, 3 மாதங்களுக்கு உள்ளாகவே வட்டி வழங்கலாம் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பிஉள்ளது.தற்போது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, வங்கிகள், காலாண்டு அல்லது அரையாண்டிற்கு ஒரு முறை, வட்டியை கணக்கிட்டு வழங்கி வருகின்றன.
கூட்டு வட்டி:இத்தகைய நடைமுறையால், கூட்டு வட்டி அடிப்படையில், வருவாய் குறைவதாகவும், அதனால், மாதந்தோறும் வட்டியை கணக்கில் சேர்க்க வேண்டும் என, வாடிக்கையாளர் கள் புகார் தெரிவித்தனர்.இதை, நடைமுறைப்படுத்தினால், பணிச்சுமை அதிகமாகும்; இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய கூடுதல் செலவாகும் என, வாடிக்கையாளர்களின் யோசனையை ஏற்க வங்கிகள் மறுத்தன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கையில், அனைத்து வங்கிக் கிளைகளும் ஒருங்கிணைப்பு (கோர் பேங்கிங்) வசதிகளை கொண்டுள்ளதால், சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, காலாண்டிற்குள்ளாகவே, வட்டி வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள்,இதை நடைமுறைப்படுத்தும் போது, வாடிக்கையாளர்களுக்கு, இதுவரை கிடைத்ததை விட, சற்று அதிக வருவாய் கிடைக்கும்.
பிரச்னை:மேலும், வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதற்காக, சில வங்கிகள், பிடித்தம் செய்யும் தொகை தொடர்பான பிரச்னைக்கும் இதன் மூலம் தீர்வு ஏற்படும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)