பதிவு செய்த நாள்
02 டிச2013
06:12
மும்பை:வங்கிகள், வாடிக்கையாளர் களின் சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, 3 மாதங்களுக்கு உள்ளாகவே வட்டி வழங்கலாம் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பிஉள்ளது.தற்போது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, வங்கிகள், காலாண்டு அல்லது அரையாண்டிற்கு ஒரு முறை, வட்டியை கணக்கிட்டு வழங்கி வருகின்றன.
கூட்டு வட்டி:இத்தகைய நடைமுறையால், கூட்டு வட்டி அடிப்படையில், வருவாய் குறைவதாகவும், அதனால், மாதந்தோறும் வட்டியை கணக்கில் சேர்க்க வேண்டும் என, வாடிக்கையாளர் கள் புகார் தெரிவித்தனர்.இதை, நடைமுறைப்படுத்தினால், பணிச்சுமை அதிகமாகும்; இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய கூடுதல் செலவாகும் என, வாடிக்கையாளர்களின் யோசனையை ஏற்க வங்கிகள் மறுத்தன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கையில், அனைத்து வங்கிக் கிளைகளும் ஒருங்கிணைப்பு (கோர் பேங்கிங்) வசதிகளை கொண்டுள்ளதால், சேமிப்பு கணக்கு மற்றும் குறித்த கால டெபாசிட்டிற்கு, காலாண்டிற்குள்ளாகவே, வட்டி வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள்,இதை நடைமுறைப்படுத்தும் போது, வாடிக்கையாளர்களுக்கு, இதுவரை கிடைத்ததை விட, சற்று அதிக வருவாய் கிடைக்கும்.
பிரச்னை:மேலும், வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதற்காக, சில வங்கிகள், பிடித்தம் செய்யும் தொகை தொடர்பான பிரச்னைக்கும் இதன் மூலம் தீர்வு ஏற்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|