பதிவு செய்த நாள்
02 டிச2013
06:59
மும்பை:வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்டிற்கு, வங்கிகள் அதிக வட்டி வழங்குவதற்கான காலக்கெடு, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில் ரூபாய் மதிப்பை, ஸ்திரப்படுத்தவும், அதிக அளவில் டாலரை திரட்டவும், வெளிநாடுவாழ் இந்தியரின் டெபாசிட்டுகளுக்கு, கூடுதல் வட்டி வழங்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களின், ரூபாய் மற்றும் அன்னியச் செலாவணி வாயிலான டெபாசிட்டுகளுக்கு, வங்கிகள், ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து, கூடுதல் வட்டி வழங்கி வருகின்றன. இத்திட்டம், நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.இந்நிலையில், இத்திட்டம், வரும், 2014ம் ஆண்டு, ஜனவரி, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.அதிக அளவில் டாலரை ஈர்க்கும் நோக்கில், இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|