பதிவு செய்த நாள்
02 டிச2013
12:53
வாஷி: வட மாநிலங்களில், சில வாரங்களுக்கு முன், வெங்காயம் மற்றும் தக்காளி, நூறு ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில், அந்த இடத்தை, இப்போது, வெள்ளைப்பூண்டு பிடித்துள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில், 1 கிலோ வெள்ளைப்பூண்டு, 160 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 1 கிலோ, தரமான வெள்ளைப்பூண்டு, அதிகபட்சம், 80 - 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வட மாநிலங்களிலும், இந்த விலையில் தான் விற்கப்பட்டு வந்த வெள்ளைப்பூண்டுக்கு, திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலையும், திடீரென உயர்ந்து உள்ளது.வழக்கமாக, 80 - 100 ரூபாய் வரை, விற்கப்பட்ட, 1 கிலோ வெள்ளைப்பூண்டு, கடந்த சில நாட்களாக, சில்லரை விலையில், 160 ரூபாயை தாண்டி விற்கிறது. விலை உயர்வுக்கு காரணம், குஜராத், ம.பி., மாநிலங்கள் என, கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு வெள்ளைப் பூண்டு வினியோகம், மகாராஷ்டிராவின், வாஷி மொத்த மண்டியிலிருந்து தான் செய்யப்படுகிறது. இந்த மொத்த மார்க்கெட்டுக்கு, தினமும், 15 - 20 லாரிகளில், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து, வெள்ளைப்பூண்டு வருவது வழக்கம்.
குஜராத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வௌ்ளத்தால், அறுவடை செய்ய தயாராக இருந்த வெள்ளைப்பூண்டு நாசமாகியுள்ளது. இதையடுத்து, விளைச்சல் குறைந்ததால், வாஷி மார்க்கெட்டுக்கு, நான்கைந்து லாரிகளில் தான், பூண்டு வருகிறது.இதனால், வட மாநிலங்கள் மற்றும் பிற மேற்கு பகுதி மாநிலங்களில், 1 கிலோ வெள்ளைப்பூண்டு, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெள்ளைப்பூண்டு விளையும் மாநிலங்களில், மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், விளைச்சல் குறையும் என கூறும் சாகுபடியாளர்கள், அடுத்த மாதம் வரை, விலை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|