பதிவு செய்த நாள்
03 டிச2013
00:46
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற் கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஸ்பெயின் நாட்டில், கடந்த மாதத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி சரிவை கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்குகைமாறின. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 106.08 புள்ளிகள் அதிகரித்து, 20,898.01 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,941 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,770.51 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, ஜிந்தால் ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட, 21 நிறுவனப்பங்குகளின் விலை உயர்ந்தும், எச்.யு.எல்., மாருதி, ஹிண்டால்கோ உள்ளிட்ட, ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 41.75 புள்ளிகள் உயர்ந்து, 6,217.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,228.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,171.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|