பதிவு செய்த நாள்
03 டிச2013
12:54
திண்டுக்கல் :ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலைசரிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டாண்டாக பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி விளைச்சல் குறைந்ததால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை விலை அதிகரித்தது. தக்காளி கிலோ ரூ.50 முதல் 55 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.70 முதல் 75 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ.15 க்கும், பெரிய வெங்காயம் ரூ.25 க்கும், சின்ன வெங்காயம் ரூ.40 க்கும் விற்கப்பட்டது.
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரி தேவதாஸ் கூறியதாவது: ஆந்திரா, கர்நாடகா வரத்தால் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது, என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|