பதிவு செய்த நாள்
03 டிச2013
15:10
புதுடில்லி: விமான எரிபொருள் கட்டணம், நேற்று, 0.8 சதவீதம் உயர்ந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததையடுத்து, இறக்குமதி கட்டணம் உயர்ந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் கட்டணம், கடந்த மாதம் , 4.5 சதவீதம் குறைக்கப்பட்டது. இது, ஆறு மாதங்களில், முதல் கட்டண குறைப்பாகும். இதன் பின், முதன் முறையாக, விமான எரி பொருள் கட்டணம், நேற்று, 0.8 சதவீதம் உயர்த்தப்பட்டது. பல்வேறு விமான நிலையங்களில் விதிக்கப்படும், உள்ளூர் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி மாறுபட்டுள்ளது. இந்த விலை உயர்வு, மத்திய அரசின் விமான நிறுவனமான, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிக்கலை கொடுத்துள்ளது. ஏற்கனவே கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதி, விமான எரிபொருளுக்கான கட்டணத்தை, சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயம் செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|