பதிவு செய்த நாள்
03 டிச2013
16:34
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. கடந்த 3 நாட்கள் நடந்த பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 477 புள்ளிகள் வரை லாபம் அடைந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை லாப நோக்கத்தோடு விற்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 43.09 புள்ளிகள் சரிந்து 20,854.92-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 16 புள்ளிகள் சரிந்து 6,201.85-ஆகவும் முடிந்தன.
ரிலையன்ஸ், கெயில், இன்போசிஸ் உள்ளிட்ட ஒரு சில பங்குகளை தவிர்த்து சென்செக்ஸை அளவிட உதவும் மற்ற பங்குகளின் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக லார்சன் அண்ட் டர்போ, எச்டிஎப்சி., ஐடிசி., உள்ளிட்ட பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|