பதிவு செய்த நாள்
04 டிச2013
00:39
மும்பை:இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு துறை, வரும் 2017ம் ஆண்டு, 15,820 கோடி டாலராக ( 9.49 லட்சம்கோடி ரூபாய் ) வளர்ச்சி காணும் என, ஈக்குவென்டிஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருவதுடன், ஆரோக்கிய பராமரிப்பிற்காக, தனிநபர் செலவிடும் தொகையும் உயர்ந்து வருகிறது.கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவின் ஆரோக்கிய பராமரிப்பு துறையின் சந்தை மதிப்பு, 7,860 கோடி டாலராக ( 4.71 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.
இத்துறையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி, 15 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.கடந்த 2008ம் ஆண்டில், இத்துறையின் சந்தை மதிப்பு, 4,500 கோடி டாலராக இருந்தது.இந்திய மக்களிடம் ஆரோக்கிய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, பொது மற்றும் தனியார் துறை, நிறுவனங்கள், ஆரோக்கிய பராமரிப்பிற்காக அதிகளவில் செலவிட்டு வருகின்றன.கடந்த 2005ம் ஆண்டில், ஆரோக்கிய பராமரிப்பிற்கான செலவினத்தில், தனியார் துறையின் பங்களிப்பு, 66 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2015ம் ஆண்டில், 81 சதவீதமாக உயரும் என, ஈக்குவென்டிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|