பதிவு செய்த நாள்
04 டிச2013
00:45
புதுடில்லி: 'நடப்பு நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், கோல் இந்தியா நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, நிலக்கரி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுத் துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்திற்கு, நடப்பு, 2013–14ம் நிதியாண்டில், 48 கோடி டன் நிலக்கரி உற்பத்தி மேற்கொள்ளவும், 49.20 டன் நிலக்கரி விற்பனை செய்யவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட இரு இலக்குகளும் எட்டப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு, கோல் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.நரசிங் ராவிடம், அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.கடந்த அக்டோபர் மாதம், கோல் இந்தியா நிறுவனம் நிர்ணயித்த, 4.08 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கில், 3.50 கோடி டன் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|