பதிவு செய்த நாள்
05 டிச2013
00:13
புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளது என, சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின்பொது பணவீக்கமும், சில்லரை பணவீக்கமும், முறையே, 7 சதவீதம் மற்றும் 10.1 சதவீதமாக அதிகரித்துள்ளன.எனவே, ரிசர்வ் வங்கி, இம்மாதம் 18ம் தேதிஅறிவிக்கவுள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை 0.25 சதவீத அளவிற்கு உயர்த்தக்கூடும்.
இந்நிலையில், நடப்பு 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதம் என்ற அளவிலும், வரும் 2014–15ம் நிதியாண்டில், 6.6 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும்.இது, பல்வேறு அமைப்புகளின் மதிப்பீட்டை விட, ஒரு சதவீதம் அதிகமாகும்.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கை:இந்திய அரசு, பல்வேறு நிதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
சாதகமான பருவ நிலையால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், 5,000 கோடி டாலர்மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி, நன்கு இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|