ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ... வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளுக்கான ‘ரெப்போ’வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
00:13

புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளது என, சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின்பொது பணவீக்கமும், சில்லரை பணவீக்கமும், முறையே, 7 சதவீதம் மற்றும் 10.1 சதவீதமாக அதிகரித்துள்ளன.எனவே, ரிசர்வ் வங்கி, இம்மாதம் 18ம் தேதிஅறிவிக்கவுள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை 0.25 சதவீத அளவிற்கு உயர்த்தக்கூடும்.
இந்நிலையில், நடப்பு 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதம் என்ற அளவிலும், வரும் 2014–15ம் நிதியாண்டில், 6.6 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும்.இது, பல்வேறு அமைப்புகளின் மதிப்பீட்டை விட, ஒரு சதவீதம் அதிகமாகும்.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கை:இந்திய அரசு, பல்வேறு நிதி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, ரூபாய் மதிப்பை நிலை நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
சாதகமான பருவ நிலையால், இந்தியாவின் வேளாண் உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், 5,000 கோடி டாலர்மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி, நன்கு இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)