பதிவு செய்த நாள்
05 டிச2013
00:17
புதுடில்லி: நாட்டின். தங்கம் இறக்குமதி குறைந்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, வெள்ளி இறக்குமதி அதிகரித்து வருகிறது.சென்ற அக்டோபரில், வெள்ளி இறக்குமதி, முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவாக, 40 சதவீதம் அதிகரித்து, 338டன்னாக உயர்ந்துள்ளது.
திருமண காலம்இது, இதற்கு முந்தையசெப்டம்பர் மாதம், 241 டன்னாக இருந்தது என, தாம்சன் ராய்ட்டர்ஸ் ஜி.எப்.எம்.எஸ்., வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வழக்கமாக, அக்டோபர் மாதத்தில், தசரா விழா, தீபாவளி பண்டிகை, திருமண சீசன் ஆகியவற்றை முன்னிட்டு, உள்நாட்டில், தங்கம், வெள்ளி விற்பனை அதிகரிக்கும்.
நாட்டின் நடப்பு கணக்குபற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில், தங்கம் இறக்குமதிக்கு, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால், அதன்இறக்குமதி குறைந்துள்ளது.அதே சமயம், சர்வதேச அளவில் வெள்ளி விலை குறைந்துள்ளதாலும், உள்நாட்டில், தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளி பயன்பாடு உயர்ந்து வருவதாலும், அதன் இறக்குமதி அதிகரித்துள்ளது. உலகளவில், வெள்ளி விலை, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை, 15–20 டாலர் என்ற அளவில், வீழ்ச்சி கண்டுள்ளது.இதை பயன்படுத்தி, அதிக அளவில் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.பயன்பாடுஇத்தகைய போக்கு, அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என, இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் வெள்ளி இறக்குமதி அதிகரிப்பிற்கு ஏற்ப, அதன்பயன்பாடும் உயர்ந்து வருகிறது. இதற்கு, கிராமப்புறங்களில் வெள்ளிக்கானதேவை அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.சிறப்பான அறுவடை காரண மாக, கிராமப்புற மக்களின் சராசரி வருவாய் அதிகரித்துள்ளது. இதனால், ஊரகப்பகுதிகளில், வெள்ளி ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது.இதுவும் வெள்ளி இறக்குமதி அதிகரிக்க காரணம் என, வெள்ளி நகை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதே நிலை தொடர்ந்தால், நடப்பாண்டு இறுதிக்குள், நாட்டின் வெள்ளி இறக்குமதி, 5,200–5,400 டன்னாக உயரும் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாதங்களில், 4,652 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள் சர்வதேச சந்தையில், நடப்பாண்டில், தங்கம் விலை, கடந்த, 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளால், இந்தியாவிற்கு தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி, உலகளவில்,தங்கம் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள இந்தியாவை,நடப்பாண்டு,சீனா விஞ்சும்என, உலகதங்ககவுன்சில் மதிப்பிட்டுள்ளது. அதே சமயம், வெள்ளிஇறக்குமதியில், இந்தியா புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|