வரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவுவரத்து அதிகரிப்பால்பெரிய வெங்காயம் விலை சரிவு ... பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிலக்கடலை உற்பத்தி 49 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
00:38

மும்பை: நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன்–செப்.,), நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, 49.16 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற, 2012ம் ஆண்டு கரீப் பருவ உற்பத்தியை (28.12 லட்சம் டன்) விட, 73 சதவீதம்அதிகமாகும்.ராஜஸ்தான்பருவமழை பொய்த்ததால், சென்ற ஆண்டு கரீப் பருவத்தில், நிலக்கடலை உற்பத்தி குறைந்தது. ஆனால், நடப்பாண்டு, நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்ததை அடுத்து, நிலக்கடலை உற்பத்தி சிறப்பாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இம்மாத இறுதியில் அறுவடை முடிந்தபிறகே, உற்பத்தி குறித்த இறுதி நிலவரம் தெரியவரும்.நாட்டின் நிலக்கடலை உற்பத்தியில், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் நிலக்கடலை உற்பத்தியில், இந்தியா, மூன்றாவது இடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டில், நிலக்கடலை உற்பத்தி, 70–80 லட்சம் டன்னாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற 2012–13ம் நிதியாண்டில், 47 லட்சம் டன்னாக இருந்தது.ஆதரவு விலைநடப்பாண்டு, நிலக்கடலைஉற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்து வருகிறது.குறிப்பாக, நிலக்கடலை அதிகம் விளையும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில், அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைந்துள்ளது.
ஒரு குவிண்டால் நிலக்கடலைக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது, கடந்த, 2011–12ம் நிதியாண்டில், 2,700 ரூபாயாக இருந்தது. சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலும், மத்திய அரசு, நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது.
ஆனால், தற்போது, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைந்துள்ளதால், மத்திய அரசின், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாபெட்), விவசாயிகளிடம் இருந்து விரைவாக, நிலக்கடலையை கொள்முதல் செய்து வருகிறது.நடப்பு டிசம்பர் 3ம் தேதி வரை, குஜராத், ராஜஸ்தான் மாநில விவசாயிகளிடம் இருந்து, 21 ஆயிரம் டன் நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, உ.பி.,ம், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், நிலக்கடலை, கொள்முதல் துவங்க உள்ளது.வெளிச்சந்தையில் நிலக்கடலை விற்பனைக்கு வரும்போது, அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது, நிலக்கடலை விலை, 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், 6 லட்சம் டன் நிலக்கடலை ஏற்றுமதி செய்யப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், உள்நாட்டில், நிலக்கடலை விலை வீழ்ச்சி அதிகம் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.இறக்குமதிசென்ற நிதியாண்டில், இந்தியா, 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இதில், பாமாயில், சோயா எண்ணெய்ஆகியவற்றின் பங்களிப்பு அதிகம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)