பதிவு செய்த நாள்
05 டிச2013
00:38
மும்பை: நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன்–செப்.,), நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, 49.16 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற, 2012ம் ஆண்டு கரீப் பருவ உற்பத்தியை (28.12 லட்சம் டன்) விட, 73 சதவீதம்அதிகமாகும்.ராஜஸ்தான்பருவமழை பொய்த்ததால், சென்ற ஆண்டு கரீப் பருவத்தில், நிலக்கடலை உற்பத்தி குறைந்தது. ஆனால், நடப்பாண்டு, நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்ததை அடுத்து, நிலக்கடலை உற்பத்தி சிறப்பாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இம்மாத இறுதியில் அறுவடை முடிந்தபிறகே, உற்பத்தி குறித்த இறுதி நிலவரம் தெரியவரும்.நாட்டின் நிலக்கடலை உற்பத்தியில், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் நிலக்கடலை உற்பத்தியில், இந்தியா, மூன்றாவது இடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டில், நிலக்கடலை உற்பத்தி, 70–80 லட்சம் டன்னாக இருக்கும் என,மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற 2012–13ம் நிதியாண்டில், 47 லட்சம் டன்னாக இருந்தது.ஆதரவு விலைநடப்பாண்டு, நிலக்கடலைஉற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிவடைந்து வருகிறது.குறிப்பாக, நிலக்கடலை அதிகம் விளையும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில், அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைந்துள்ளது.
ஒரு குவிண்டால் நிலக்கடலைக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது, கடந்த, 2011–12ம் நிதியாண்டில், 2,700 ரூபாயாக இருந்தது. சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கிலும், மத்திய அரசு, நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது.
ஆனால், தற்போது, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைந்துள்ளதால், மத்திய அரசின், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நாபெட்), விவசாயிகளிடம் இருந்து விரைவாக, நிலக்கடலையை கொள்முதல் செய்து வருகிறது.நடப்பு டிசம்பர் 3ம் தேதி வரை, குஜராத், ராஜஸ்தான் மாநில விவசாயிகளிடம் இருந்து, 21 ஆயிரம் டன் நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, உ.பி.,ம், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், நிலக்கடலை, கொள்முதல் துவங்க உள்ளது.வெளிச்சந்தையில் நிலக்கடலை விற்பனைக்கு வரும்போது, அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது, நிலக்கடலை விலை, 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், 6 லட்சம் டன் நிலக்கடலை ஏற்றுமதி செய்யப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், உள்நாட்டில், நிலக்கடலை விலை வீழ்ச்சி அதிகம் இருக்காது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.இறக்குமதிசென்ற நிதியாண்டில், இந்தியா, 61 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இதில், பாமாயில், சோயா எண்ணெய்ஆகியவற்றின் பங்களிப்பு அதிகம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|