பதிவு செய்த நாள்
10 டிச2013
03:05
புதுடில்லி: உள்நாட்டில், மருத்துவ காப்பீட்டு பிரிமியம் வருவாய், ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு, 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.வரும் 2016–17ம் நிதியாண்டில், பொதுக் காப்பீட்டு துறையில், மருத்துவ காப்பீட்டு பிரியம் வருவாய், 3௨,038 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2011–12ம் நிதியாண்டில், மருத்துவ காப்பீட்டு பிரிமியம் வருவாய், 13,092 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், உள்நாட்டில், மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதுடன், மக்களின் செலவிடும் வருவாயும் உயர்ந்து வருகிறது.
மருத்துவத்திற்காக அதிகளவில் செலவிட வேண்டியுள்ளதால், மக்கள் அதிகளவில் மருத்துவ காப்பீட்டு வசதியை பெறத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், மருத்துவ காப்பீட்டிற்கான பிரிமியமும் உயர்ந்துள்ளது.இது போன்றவற்றால், இப்பிரிவின் வாயிலான பிரிமியம் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, ‘அசோசெம்’ அமைப்பின் தலைமை செயலர் டீ.எஸ்.ராவத் தெரிவித்தார்.நாட்டின் ஒட்டு மொத்த மருத்துவ காப்பீட்டு வணிகத்தில், தனியார் துறை நிறுவனங்கள், 65 சதவீதபங்களிப்பையும், பொதுத் துறை நிறுவனங்கள், 35 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|