பதிவு செய்த நாள்
10 டிச2013
10:33
மும்பை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிரொலியால் இந்திய பங்குசந்தைகள் நேற்று எழுச்சி கண்ட நிலையில் இன்று(டிச., 10ம் தேதி) வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவை சந்தித்துள்ளன. நேற்று முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து இருந்ததால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு அதிகளவு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இன்றைய பங்குசந்தைகள் சரிவில் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 49.33 புள்ளிகள் சரிந்து 21,277.09-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 15.35 புள்ளிகள் சரிந்து 6,348.55-ஆகவும் இருந்தது.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.36 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.20 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|