பதிவு செய்த நாள்
11 டிச2013
00:16
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மந்தமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, பொறியியல், மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 71.16 புள்ளிகள் சரிவடைந்து, 21,255.26 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,327.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 21,175.08 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., எல் அண்டு டி, பீ.எச்.இ.எல்., உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, ஐ.டி.சி., உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 31.05 புள்ளிகள் குறைந்து, 6,332.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,362.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,307.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|