பதிவு செய்த நாள்
11 டிச2013
00:18
புதுடில்லி: பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ், வசூலிக்க வேண்டிய தொகை, மூன்றில் ஒரு பங்கு என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், முதலிடத்தில் உள்ள, 30 கணக்குகளின் பங்கு, 35.5 சதவீதமாக உள்ளது. இது, அனைத்து வங்கிகளையும் கணக்கிட்டால், 38.8 சதவீதமாக காணப்படுகிறது.மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறை வங்கிகளில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளின் கீழ் உள்ள வசூலாகாத தொகை, 72,174 கோடி ரூபாயாக உள்ளது. இது, அனைத்து வங்கிகளை யும் சேர்த்தால், 91,667 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது.
நடப்பு, 2013–14ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை வங்கிகளின், மொத்த வசூலாகாத கடன், 71,260 கோடி ரூபாயாக உள்ளது. இதில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளின் பங்கு, 21.7 சதவீதமாக (16,511 கோடி ரூபாய்) உள்ளது.வங்கிகளின் வசூலாகாத கடனை குறைக்க, ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|