அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களில்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலிடம்அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களில்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ... ... 10 மணி நேரம் மின்வெட்டால்...ஏற்றுமதி வாய்ப்பை இழக்கும் திருப்பூர் பின்னலாடை துறை 10 மணி நேரம் மின்வெட்டால்...ஏற்றுமதி வாய்ப்பை இழக்கும் திருப்பூர் ... ...
வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில்30 கணக்குகளில் 36 சதவீத தொகை நிலுவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
00:18

புதுடில்லி: பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ், வசூலிக்க வேண்டிய தொகை, மூன்றில் ஒரு பங்கு என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், முதலிடத்தில் உள்ள, 30 கணக்குகளின் பங்கு, 35.5 சதவீதமாக உள்ளது. இது, அனைத்து வங்கிகளையும் கணக்கிட்டால், 38.8 சதவீதமாக காணப்படுகிறது.மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறை வங்கிகளில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளின் கீழ் உள்ள வசூலாகாத தொகை, 72,174 கோடி ரூபாயாக உள்ளது. இது, அனைத்து வங்கிகளை யும் சேர்த்தால், 91,667 கோடி ரூபாய் என்ற அளவிற்கு உள்ளது.
நடப்பு, 2013–14ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை வங்கிகளின், மொத்த வசூலாகாத கடன், 71,260 கோடி ரூபாயாக உள்ளது. இதில், முன்னணியில் உள்ள, 30 கணக்குகளின் பங்கு, 21.7 சதவீதமாக (16,511 கோடி ரூபாய்) உள்ளது.வங்கிகளின் வசூலாகாத கடனை குறைக்க, ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)