பதிவு செய்த நாள்
11 டிச2013
15:01
புதுடில்லி : பொருளாதாரம் தொடர்பான மசோதாக்களை உடனடியாக நிறைவேற்றுங்கள் இல்லையேல் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்கள் எழும் என பார்லிமென்ட் எம்.பி.க்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்லிமென்ட்டில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம் போல் அரசியல் எம்.பி.க்களின் கூச்சல் குழப்பங்களால் அவை சரியாக நடைபெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், டில்லியில் துவங்கியுள்ள பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அவர் பேசுகையில், 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே பொருளாதாரம் தொடர்பான மசோதாக்களை விரைவாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லையேல் தேர்தலுக்கு பிறகு வரும் புதிய அரசு எதிர்கொள்ள போகும் பொருளாதார சவால்கள் அதிகமாக இருக்கும். ஆகவே மசோதாக்களை உடனடியாக நிறைவேற்ற அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நடப்பு கூட்டத்தொடரிலேயே பொருளாதாரம் தொடர்பான மசோதாக்களை நிறைவேறினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், நிதிநிலை உயர்வும் உயர வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|