பதிவு செய்த நாள்
12 டிச2013
00:39
புதுடில்லி: 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மசோதாக்களை, வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என, அரசியல் கட்சிகளை, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சவால் நிறைந்தது:டெல்லியில், பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:வரும் பொதுத் தேர்தலுக்கு பிறகு, மத்தியில் நிலையானஆட்சிதான் அமையும் என்பதை உறுதியாக கூற முடியாது.அதனால், பொதுத் தேர்தலுக்கு பின்னர், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றலாம் என எண்ணுவது, அரசியல் கட்சிகளுக்கு ஆபத்தாக முடியலாம். யார் ஆட்சிக்கு வந்தாலும், தேர்தலுக்கு பிந்தைய அரசியல், தற்போதுள்ளதை விட, அதிக சவாலானதாக இருக்கும்.
பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி வளத்தை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக, சந்தை விலைக்கு, டீசல் விலையை உயர்த்தவும், சில, தேவையற்ற மானியச்சுமைகளை நீக்கவும் துணை புரியும். முடங்கியுள்ள பெரியதிட்டங்களை மீண்டும்செயல்பாட்டிற்குகொண்டு வர தாமதித்தாலோ அல்லது அவற்றுக்கான நிதிச்செலவினம் அதிகரித்தாலோ, அது, புதிய அரசுக்கான சவால்களை மேலும் கடுமையானதாக்கும்.
சாதகமாக இருக்காது:பொது தேர்தலுக்கு பின், மத்தியில் நிலையான ஆட்சி அமையாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் சவால்களுக்கு, அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வு காண முன் வர வேண்டும். இல்லையென்றால், சந்தைகளும், தர நிர்ணய அமைப்புகளின் அளவீடுகளும்,இந்தியாவிற்கு சாதகமாக இருக்காது.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான அறிகுறிகள் தென் படுகின்றன. நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதம்என்ற அளவில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|