தங்கம் விலை ரூ.24 குறைந்ததுதங்கம் விலை ரூ.24 குறைந்தது ... 'ஸ்வைப்' செய்ய 'பின்' எண் கட்டாயம்: ரகசிய குறியீடு அம்பலமாவதால் அவதி 'ஸ்வைப்' செய்ய 'பின்' எண் கட்டாயம்: ரகசிய குறியீடு அம்பலமாவதால் அவதி ...
நவம்பர் மாதத்தில் 'சரக்கு'விற்பனை குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2013
15:03

போலி 'சரக்கு' அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர், மது வகைகள் விற்கப்பட வேண்டும். ஆனால், எல்லா கடைகளிலும், ஒரு பாட்டிலுக்கு, கூடுதலாக, ஐந்து முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும், 'சரக்கு'கள், டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது, சபரிமலை சீசனால், மது அருந்துவோர் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் விற்பனை இறங்கு முகமாக உள்ளது.

சென்ற நவம்பர் மாதம், டாஸ்மாக் கடைகளில், 18 லட்சம் பெட்டி பீர் (2.16 கோடி பாட்டில்கள்) மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 216 கோடி ரூபாய். அதே சமயம், பீர் விற்பனை, அக்டோபர் மாதத்தில், 21 லட்சம் பெட்டிகளாகவும், செப்டம்பரில், 24 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது. மது வகைகள் விற்பனை, 48 லட்சம் பெட்டியில் இருந்து, 41 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில், இதன் விற்பனை, 43 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நவம்பர் முதல் ஜனவரி வரை, டாஸ்மாக் கடைகளில், விற்பனை குறைவாக தான் இருக்கும்' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)