பதிவு செய்த நாள்
12 டிச2013
15:03
போலி 'சரக்கு' அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் விற்பனை, தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது.
தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர், மது வகைகள் விற்கப்பட வேண்டும். ஆனால், எல்லா கடைகளிலும், ஒரு பாட்டிலுக்கு, கூடுதலாக, ஐந்து முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும், 'சரக்கு'கள், டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது, சபரிமலை சீசனால், மது அருந்துவோர் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் விற்பனை இறங்கு முகமாக உள்ளது.
சென்ற நவம்பர் மாதம், டாஸ்மாக் கடைகளில், 18 லட்சம் பெட்டி பீர் (2.16 கோடி பாட்டில்கள்) மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு, 216 கோடி ரூபாய். அதே சமயம், பீர் விற்பனை, அக்டோபர் மாதத்தில், 21 லட்சம் பெட்டிகளாகவும், செப்டம்பரில், 24 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது. மது வகைகள் விற்பனை, 48 லட்சம் பெட்டியில் இருந்து, 41 லட்சம் பெட்டிகளாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில், இதன் விற்பனை, 43 லட்சம் பெட்டிகளாக இருந்தது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நவம்பர் முதல் ஜனவரி வரை, டாஸ்மாக் கடைகளில், விற்பனை குறைவாக தான் இருக்கும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|