பதிவு செய்த நாள்
12 டிச2013
16:49
மும்பை : ஐந்து மாநில தேர்தல் முடிவால் இந்தவாரத்தின் முதல்நாளில் சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவால், வாரத்தின் நான்காம் நாளான இன்று சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
அமெரிக்க பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவு, அதனைத்தொடர்ந்து ஆசிய பங்குசந்தைகளிலும் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கியது, ரிசர்வ் வங்கி அடுத்தவாரம் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்க போவதாக வந்த செய்தி, அதனால் வங்கி தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 245.80 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்திற்கு கீழ் சென்று 20,925.61எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 70.85 புள்ளிகள் சரிந்து 6,237.05 எனும் நிலையிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகளின் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் 4.55 சதவீதமும், ஓஎன்ஜிசி 2.7 சதவீதமும், ஐசிஐசிஐ 2.36 சதவீதமும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|