வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கடன்பத்திரம் மூலம் ரூ.11,175 கோடி திரட்டல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 டிச2013
01:34
புதுடில்லி: நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனியார் கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம், திரட்டிய தொகை, 11,175 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. மொத்தம், 92 ஒதுக்கீடுகள் மூலம், இந்த தொகை திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்து உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இவ்வகை வெளியீடுகள் வாயிலாக, நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2,089 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நான்கு மாதங்களுக்கு பின், சென்ற நவம்பரில் தான், கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், நிறுவனங்கள் திரட்டிய தொகை, இந்த அளவிற்கு சரிவடைந்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், இந்திய நிறுவனங்கள், கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம் திரட்டிய தொகை, 1.77 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 13,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 13,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 13,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 13,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!