பதிவு செய்த நாள்
13 டிச2013
01:37
மும்பை: சென்ற நவம்பர் 30ம் தேதி வரையிலான 15 தினங்களில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 16.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74,77, 928 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 64,40,028 ரூபாயாக இருந்தது.வெளிநாடு வாழ் இந்தியர் மதிப்பீட்டு காலத்தில், வங்கி கள் திரட்டிய டெபாசிட், அவை வழங்கிய உணவு சாரா கடனை விட, ( 14.04 சதவீதம்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 9 மாதங்களில் முதன் முறையாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட், உணவு சாரா கடனை விட, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
வங்கிகள், 'ஸ்வாப்' என்படும் அன்னிய செலாவணி பரிமாற்ற திட்டத்தின் கீழ், வெளி நாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (எப்.சி.என்.ஆர்) அதிகளவில் டெபாசிட் தொகையை திரட்டியுள்ளன. இதையடுத்து, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் அளவை காட்டிலும், அவை திரட்டிய டெபாசிட் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு உள்ளது.
சென்ற மார்ச் மாதம் 22ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில் தான், வங்கிகள் திரட்டிய 14.26 சதவீத டெபாசிட்டிற்கு சற்று நிகராக, அவை வழங்கிய, உணவு சாரா கடன், 14.04 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய, குறித்த கால டெபாசிட், 17.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58,17,458 கோடியிலிருந்து, 68,08,698 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கிவங்கிகளின் டிமாண்ட் டெபாசிட், 7.49 சதவீதம் அதிகரித்து, 6,22,570 கோடியிலிருந்து, 6,69,227 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|