பதிவு செய்த நாள்
13 டிச2013
01:40
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் அடுத்த வாரம் வரவிருக்கும், ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி ஆய்வு கொள்கை குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றால், முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டனர்.
இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.ஐரோப்பிய சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், வங்கி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், கடும் வீழ்ச்சி கண்டன.அதேசமயம், மின் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்கிற்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 245.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,925.61 புள்ளிகளில் நிலைகொண்டது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 26 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா பவர், எச்.டீ.எப்.சி., கெயில் மற்றும் என்.டி.பி.சி., ஆகிய நான்கு நிறுவனப் பங்குகள்விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,‘நிப்டி’, 70.85 புள்ளிகள் சரிவடைந்து, 6,237.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|