செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் செல்ல விருப்பம் செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வுக்கு ரூ.244 கோடி செலவு : 20,000 இந்தியர்கள் செவ்வாய் ... ... ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு மீண்டும் மவுசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
01:45

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு பெருகி வருகிறது.கடந்த நவம்பர் மாதம், மேற்கண்ட திட்டங்களின் கீழ், பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து, 5,414 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இது, நடப்பு நிதியாண்டில், சராசரியாக ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, இரு மடங்கு அதிகமாகும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை:மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் நடவடிக்கையால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, குறைந்துள்ளது. இந்திய தொழில்துறை, மந்தகதியில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி தோன்றியுள்ளது. மேலும், அமெரிக்க மத்திய வங்கி, அதன் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் திட்டம் தள்ளிப் போகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதனால், இந்திய பங்குச் சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து உள்ளது.நடப்பாண்டு துவக்கம் முதல், பங்குச் சந்தை அதிக அளவில் ஏற்ற, இறக்கத்தை கண்டு வந்தது.இந்நிலையில்,அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுஅதிகரிக்க துவங்கியதை அடுத்து, சென்ற அக்டோபர் மாதம், இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்', நீண்ட இடைவெளிக்கு பின்னர், 21ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.

சாதகமான தருணம்:இந்த சாதகமான தருணத்தை பயன்படுத்திகொண்ட முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 3,542 கோடி ரூபாய் அளவிலான நிகர முதலீட்டை திரும்ப பெற்றனர்.இதன் காரணமாக, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த கணக்குகள், 5.47 லட்சத்தில் இருந்து, 3.82 லட்சமாக குறைந்தன.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம், பங்குச் சந்தையில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. 'சென்செக்ஸ்' , ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது.

அறிமுகம்: இந்த தொய்வையும், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள், சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.மீண்டும் பங்குச் சந்தை எழுச்சி காணும்போது, யூனிட்டுகளை விற்று, லாபமீட்டலாம் என்ற நோக்கத்தில்,5,414 கோடி ரூபாய் அளவிற்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தனர்.

மேற்கண்டவற்றில், காலவரையறை உள்ள திட்டங்களில், 847 கோடி ரூபாயும், காலவரையறை இல்லாத திட்டங்களில், 24 கோடி ரூபாயும், இதர திட்டங்களில், எஞ்சிய முதலீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சி., யூனியன் கே.பீ.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள், நவம்பர் மாதம், காலவரையறை கொண்ட, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகம் செய்து, அவற்றில் அதிக அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்துக் கொண்டன.

எதிர்பார்ப்பு:நடப்பு டிசம்பர் மாதம், 'சென்செக்ஸ்', 22 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக, பரஸ்பர நிதி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சமீபத்திய அரசியல் நிலவரங்களால், பங்குச் சந்தையின் எழுச்சி தொடர்ந்து நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் காரணம் என, அவர் மேலும் கூறினார்.

– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)