பதிவு செய்த நாள்
13 டிச2013
13:54
இந்திய மோட்டார் வாகனத்துறையின் புரட்சியாக கருதப்படும் மாருதி ”சுசூகியின் ஆல்டோ கார் 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மிக குறுகிய காலகட்டத்தில் ஆல்டோ, இந்தியா அனைத்திலும் அதிகமாக விற்கப்படும் கார் என்ற பெருமையை பெற்றதுடன், அப்பெருமையை தக்க வைத்தும் கொண்டு உள்ளது. வளர்ந்து வரும் இந்திய ஜனத்தொகையின் தேவைகளுக்கும், குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டு ஆல்டோவில் புதிய வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளில் ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே-10 மிக பிரபலமானவை.
2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்டோ 800 பல சாதனைகளை படைத்ததுடன், மிக அதிகமான விருதுகளை பெற்ற கௌரவத்தையும் பெற்றுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை இலக்கை தொட்டது மட்டுமின்றி, உலகின் 2வது மிகப்பெரிய கார் பிராண்டாகவும் திகழ்கிறது ஆல்டோ 800. ஆல்டோ 800 அறிமுகப்படுத்திய ஓராண்டு நிறைவில் ஆல்டோ 800 -ன் ஆனிவர்சரி எடிசன், புதிய பாடி கிராஃபிக்ஸ், இருக்கைகளுடன் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
ஆல்டோ கே-10 மியூசிக் என்ற ஸ்பெஷல் எடிசன் ஆல்டோ கே-10 காரினை மியூசிக் சிஸ்டம், பாடி கிராஃபிக்ஸ், பிரத்யேகமான சீட் கவர்கள், ஸ்டீயரிங் மேலுறை என்ற பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுசுத்தியது மாருதி நிறுவனம். 17,560 ரூபாய் மதிப்புள்ள இச்சிறப்பம்சங்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் பேக்கேஜ் மூலம் வெறும் 12,490 ரூபாய்க்கு கிடைக்கப்பெறுகிறது.
மிக அதிக வகையான கார்கள், சிறப்பான மைலேஜ் மற்றும் இந்தியாவில் எங்கும் கிடைக்கக் கூடிய சர்வீஸ் போன்ற பல சிறப்புகளை கொண்ட மாருதியின் குடும்பத்துடன் உங்களையும் இணைத்துக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் இந்திய சாலைகளில் ஆளுமை செய்த பெருமையை பெற்ற நிறுவனமாக மாருதி திகழ்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இம்மாதம் முழுவதும் மாருதி அளிக்கும் 85,000 ரூபாய் வரை சேமிப்பு மற்றும் ஆல்டோ மீது 45,000 ரூபாய் வரையிலான சேமிப்புகள் வரும் புத்தாண்டில் உங்களுக்கு செழிப்பும் சந்தோஷமும் அளித்திடும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|