பதிவு செய்த நாள்
14 டிச2013
00:35
புதுடில்லி: என்.எச்.பி.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் நிறுவன பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக, நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜே.டீ.சீலம் பார்லிமென்டில் தெரிவித்தார்.பங்கின் விலைஎன்.எச்.பீ.சி., நிறுவனத்தின் இயக்குனர் குழு, 10 சதவீத பங்குகளை (123 கோடி பங்குகள்), பங்கு ஒன்றை, 19.25 ரூபாய் என்ற விலையில் சந்தையிலிருந்து திரும்ப வாங்க அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, மத்திய அரசு, இந்நிறுவனத்தில், 86.36 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதில், குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை நிறுவனத்திற்கு விற்பதன் வாயிலாக, அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் கிடைக்கும்.நிறுவனத்தின் பங்குகளை திரும்ப பெறுவதற்கான இத்திட்டம், நவம்பர் 29ம் தேதி துவங்கி, டிசம்பர், 12ம் தேதியுடன் நிறைவடைந்தது.பங்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், வரும் ஜனவரி 7ம் தேதியுடன் நிறைவடைந்து விடும் என, அமைச்சர் தெரிவித்தார்.தற்போது இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ௧௮ ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இலக்குநடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரை, 3,000 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|