பதிவு செய்த நாள்
14 டிச2013
00:36
மும்பை: நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 35 சதவீதம் அதிகரித்து, 9,44,309 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 7,00,371 டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பங்களிப்பு:ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 9,27,111 டன்னாகவும், சமையல் சாரா எண்ணெயின் பங்களிப்பு, 17,198 டன்னாகவும் உள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி, 172 சதவீதம் அதிகரித்து, 76,519 டன்னிலிருந்து, 2,08,076 டன்னாக உயர்ந்துள்ளது. இதே போன்று, கச்சா எண்ணெய் இறக்குமதியும், 20 சதவீதம் உயர்ந்து, 5,99,715 டன்னிலிருந்து, 7,19,519 டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், பாமாயில் இறக்குமதியும், 6,14,574 டன்னிலிருந்து, 7,74,207 டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், சமையல் சாரா எண்ணெய் இறக்குமதி, 29 சதவீதம் சரிவடைந்து, 24,137 டன்னிலிருந்து, 17,198 டன்னாக குறைந்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் கையிருப்பு, 14.70 லட்சம் டன்னாக உள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.காரணம் என்ன?சென்ற நவம்பரில், இறக்குமதியான சூரியகாந்தி எண்ணெய் விலை, டன்னுக்கு 30 டாலர் சரிவடைந்துள்ளது. மேலும், இறக்குமதியாகும் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றுக்கான விலை வித்தியாசமும், டன்னுக்கு, 10 டாலருக்கும் கீழ் குறைந்து உள்ளது. இதன் காரணமாக, தாவர எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|