ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.72 உயர்வு ... கோதுமை, பருப்பு வகைகள் உற்­பத்தி அதி­க­ரிக்கும் : பயி­ரிடும் பரப்பு உயர்ந்துள்ளது கோதுமை, பருப்பு வகைகள் உற்­பத்தி அதி­க­ரிக்கும் : பயி­ரிடும் பரப்பு ... ...
வங்கிகளின் வசூலாகாத கடன்ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2013
00:22

மும்பை:நாட்டில், 40 வங்கிகளின் வசூலாகாத கடன், சென்ற செப்டம்பர் நிலவரப்படி, 36.95 சதவீதம் அதிகரித்து,2.29 லட்சம் கோடிரூபாயாக அதிகரித்துள்ளது.இது,சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 1.67 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 40 வங்கிகளில், 10 வங்கிகளின் வசூலாகாத கடன், அவை, வழங்கிய கடனில், 5 சதவீதத்திற்கும் அதிகமாகும். இதில், எட்டு வங்கிகள், பொதுத் துறை வங்கிகளாகும்.கடன்மறுசீரமைப்பு காரணமாகத்தான், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது.மறுசீரமைக்கப்பட்ட கடன்களில், குறைந்தபட்சம், 10–20 சதவீதம் வசூலாகாத கடன்களாக மாறிவிடுகின்றன என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள், 2.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை மறு சீரமைத்துள்ளன. இத்திட்டத்தின் கீழ், கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிப்பு, வட்டி குறைப்பு ஆகியவற்றுடன், ஒரு சிலகடன்களில் குறிப்பிட்ட தொகையையும் வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன.சென்ற செப்டம்பர் வரையிலான காலாண்டில், வங்கிகளின் மறு சீரமைப்பு கடன் கணக்கில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
இரும்பு மற்றும் உருக்கு, அடிப்படை கட்டமைப்பு, ஜவுளி,மின்சாரம் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் கடன்கள், அதிக அளவில் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப் படுகின்றன.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு, அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே, வங்கிகளின் வசூலாகாத கடன் அளவு குறையும் என, ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)