பதிவு செய்த நாள்
17 டிச2013
00:28
புதுடில்லி :சென்ற நவம்பர் மாத நிலவரப்படி, உள்நாட்டில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 48.67 லட்சம் அதிகரித்து, 68.80 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பார்தி ஏர்டெல்கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், இந்தியாவில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 68.31 கோடியாக இருந்தது.கணக்கீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக, 17.22 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டு உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 19.65 கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம், இத்துறையில், 28.57 சதவீத சந்தை பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.ஏர்செல் நிறுவனம், சென்ற நவ., மாதத்தில், புதிதாக, 15.40 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.
இதன், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 6.52 கோடியாக அதிகரித்துள்ளது. வோடபோன் நிறுவனம், புதிதாக, 13.30 லட்சம் வாடிக்கையாளர் களை இணைத்துக் கொண்டுஉள்ளது. 22.97 சதவீத சந்தை பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ள, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 15.80 கோடியாக அதிகரித்து உள்ளது.வீடியோகான்ஐடியா செல்லுலார் நிறுவனம், 36,219 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. 18.66 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ள, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 12.84 கோடியாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், வீடியோகான் நிறுவனம், புதிதாக, 1.85 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. யுனிநார்இதையடுத்து, இதன் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 36.70 லட்சமாக உயர்ந்துள்ளது.யுனிநார் நிறுவனம், புதிதாக, 36,089 வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 3.23 கோடியாக உள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறுவனம், புதிதாக, 5,933 வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுஉள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 34.52 லட்சமாக உயர்ந்துள்ளது என, இந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|