இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி?இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி? ... தானிய சாகுபடி பரப்பளவு507 லட்சம் ஹெக்டேராக உயர்வு தானிய சாகுபடி பரப்பளவு507 லட்சம் ஹெக்டேராக உயர்வு ...
விளைச்சல் குறைந்ததால் செங்கரும்பு விலை இருமடங்கு உயர்வு : பொங்கல் பண்டிகை இனிக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2013
16:07

தமிழகத்தில், செங்கரும்பு விளைச்சல் குறைந்துள்ளதால், விலை, இருமடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை, எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், கடும் வறட்சி நிலவியது. செங்கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும், பல மாவட்டங்களில், நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், செங்கரும்பு பயிரிடுவது குறைந்து, முந்தைய ஆண்டை விட, 50 சதவீதம், விளைச்சல் குறைந்தது. 

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி உட்பட, சில பகுதிகளில், பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்கு வரும் வகையில், செங்கரும்பு பயிரிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு நிலவிய வறட்சியால், குறைந்த அளவிலேயே செங்கரும்பு பயிரிடப்பட்டது; தற்போது அந்தக் கரும்புகள் வெட்டும் பருவத்தில் உள்ளன. வழக்கமாக, சேலம் பகுதிகளில் விளையும் செங்கரும்புகளை, பெங்களூரு, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை வியாபாரிகளே, பொங்கல் பண்டிகை விற்பனைக்கு வாங்கிச் செல்வர். இந்த ஆண்டு, செங்கரும்பின் விலை உயர்ந்ததால், வியாபாரிகள், கரும்பு வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், வெளியூர் வியாபாரிகளின் வருகையை எதிர்பார்த்து, விவசாயிகளும், கரும்புகளை வெட்டாமல் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு, டிசம்பர் கடைசி வாரத்தில், முதல் ரக செங்கரும்பு ஒன்று, 15 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 10; 20 கரும்புகளையுடைய கட்டு, முதல் ரகம், 300, இரண்டாம் ரகம், 200 ரூபாய்; 30 கட்டுக்கள் உடைய, ஒரு லோடு கரும்பு, 5,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே தற்போது, முதல் ரகம், 30, இரண்டாம் ரகம், 20 ரூபாய், கட்டு முதல் ரகம், 600 ரூபாய், இரண்டாம் ரகம், 400 ரூபாய், லோடு கரும்பு, 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், இந்த விலை மேலும் உயரும் என்றும், விவசாயிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, செங்கரும்பு மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையின் போது, சேலம் மாவட்டத்தில், அதிக அளவில் செங்கரும்பு விளைச்சல் இருந்ததால், பெங்களூரு, சென்னை வியாபாரிகளின் வருகை அதிகரித்தது. டிசம்பர் மூன்றாவது வாரமே, கரும்புகளை வெட்டுவது துவங்கியது. ஆனால், நடப்பாண்டு விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளதால், வெளியூர் வியாபாரிகளின் வருகை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தற்போது, 30 ரூபாய்க்கு விற்கப்படும் செங்கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன், 50 ரூபாய்க்கு விற்றாலும் ஆச்சர்யமில்லை. இவ்வாறு, அந்த வியாபாரி கூறினார்.நமது நிருபர் 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)