பதிவு செய்த நாள்
17 டிச2013
16:37
மும்பை : கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இன்று(டிசம்பர் 17ம் தேதி) ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குசந்தைகள், ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கிய பங்குசந்தை இறுதியில் சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குசந்தைகளும் ஏற்றத்துடன் இருந்தன. ஆனால் இன்னும் சில தினங்களில் ரிசர்வ் வங்கிய வெளியிட இருக்கும் பணக்கொள்கை வெளியீட்டில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து 6வது நாளாக பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 47.38 புள்ளிகள் சரிந்து 20,612.14-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 15.65 புள்ளிகள் சரிந்து 6,139.05-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 16 பங்குகளின் விலை உயர்ந்தும், 14 பங்குகளின் விலை சரிந்தும் காணப்பட்டன. குறிப்பாக எச்டிஎப்சி, என்டிபிசி போன்ற பங்குகள் சரிந்தும், பார்தி ஏர்டெல், சன்பார்மான, சிப்லா, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|