பதிவு செய்த நாள்
19 டிச2013
00:31
புதுடில்லி: நடப்பு 2013 – 14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், 59,069.73 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 53,923.37 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு காலத்தில், ரயில்வே சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய், 7.91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கணக்கீட்டு காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்கின் அளவு, 4.72 சதவீதம் உயர்ந்து, 64.70 கோடி டன்னில்இருந்து, 67.76 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், சரக்குகள் கையாண்டதன் வாயிலாக, ரயில்வேக்கு, 7,880.44 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
குறிப்பாக, 3.99 கோடி டன் நிலக்கரி ஏற்றிச் சென்றதன் மூலம், ரயில்வேக்கு அதிகபட்சமாக, 3,293.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இதையடுத்து, இரும்பு தாது (1.06 கோடி டன்/874.23 கோடி ரூபாய்), சிமென்ட் (82.60 லட்சம் டன்/684.25 கோடி), உணவு தானியங்கள் (37.10 லட்சம் டன்/575.88 கோடி), பெட்ரோலிய பொருட்கள் (34.80 லட்சம் டன்/478.98 கோடி), உரங்கள் (43.90 லட்சம் டன்/489.75 கோடி) உள்ளிட்ட பொருட்களை கையாண்டதன் வாயிலாகவும், ரயில்வேக்கு, குறிப்பிடத்தக்க அளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|