இயற்கை ரப்பர் உற்பத்தி 5.17 லட்சம் டன்னாக வீழ்ச்சிஇயற்கை ரப்பர் உற்பத்தி 5.17 லட்சம் டன்னாக வீழ்ச்சி ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14 ...
‘ஆன்-–லைன் திருமண சந்தை மதிப்பு ரூ.1,500 கோடியாக உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
00:39

புதுடில்லி,: ஆன்-–லைன் திருமண சந்தையின் மதிப்பு, தற்போதைய, 520 கோடி ரூபாயில் இருந்து, வரும், 2017ம் ஆண்டில், 1,500 கோடி ரூபாயாக உயரும் என, ‘அசோசெம்’ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
நடைமுறை: இதுகுறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:ஆன்-லைன் திருமணசந்தையின் ஆண்டு சராசரி வளர்ச்சி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 65 சதவீதமாக உயரும்.சுலபமான நடைமுறை, நேரம் மிச்சம், சிறந்த பயன் போன்ற காரணங்களால், ஆன்-–லைன் திருமண சந்தை, நன்குவளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2012–13ம் நிதியாண்டில், 5 – 5.5 கோடி பேர், தங்களை பற்றிய விவரங்களை, ஆன்-–லைன் திருமண வலைத்தளங்களில் பதிவு செய்துஉள்ளனர்.
மாதம், சராசரியாக, 25 லட்சம் பேர், தங்களுக்கு தகுந்த ஜோடியை தேர்வு செய்வதற்காக, திருமண இணையதளங்களில், விவரங்களை பதிவு செய்கின்றனர்.கடந்த, 2011 – 12 மற்றும் 2012 – 13ம் நிதியாண்டுகளில், வேலை வாய்ப்பு மற்றும் திருமண ஜோடி தொடர்பான, ஆன்-–லைன் விளம்பரங்கள், முறையே, 56 சதவீதம் மற்றும் 52 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
புதிய தலைமுறையினருக்கு, குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற இணையை தேடுவதற்கும், மணம் முடிப்பதற்கும் ஆன்-லைன் திருமண இணையதளங்கள் உதவுகின்றன. இதனால், லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை உள்ளடக்கியதாக, ஆன்-லைன் திருமண தகவல் இணையதளங்கள் விளங்குகின்றன.
வேலைவாய்ப்பு: கடந்த, 2012–13ம் நிதியாண்டில், 2.50 கோடி பேர், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு தளங்களில், தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளனர். இது, வரும், 2016–17ம் நிதிஆண்டில், 5 கோடியாக உயரும்.ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு தேடுவோரில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், டில்லி, தமிழகம், கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
பயணம்: பயண டிக்கெட்டை, ஆன்-லைன் மூலம் பெறுவதும் அதிகரித்து வருகிறது. ரயில்வே பயணச் சீட்டை, ஆன்-லைனில் வாங்குவது, ஆண்டுக்கு, 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.சென்ற ஜூன் மாத நிலவரப்படி, ஆன்-லைன் வாயிலாக, ரயில் பயணத்திற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, 68.10 லட்சமாக உள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 58.30 லட்சமாக இருந்தது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)