பதிவு செய்த நாள்
19 டிச2013
00:39
புதுடில்லி,: ஆன்-–லைன் திருமண சந்தையின் மதிப்பு, தற்போதைய, 520 கோடி ரூபாயில் இருந்து, வரும், 2017ம் ஆண்டில், 1,500 கோடி ரூபாயாக உயரும் என, ‘அசோசெம்’ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
நடைமுறை: இதுகுறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:ஆன்-லைன் திருமணசந்தையின் ஆண்டு சராசரி வளர்ச்சி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 65 சதவீதமாக உயரும்.சுலபமான நடைமுறை, நேரம் மிச்சம், சிறந்த பயன் போன்ற காரணங்களால், ஆன்-–லைன் திருமண சந்தை, நன்குவளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2012–13ம் நிதியாண்டில், 5 – 5.5 கோடி பேர், தங்களை பற்றிய விவரங்களை, ஆன்-–லைன் திருமண வலைத்தளங்களில் பதிவு செய்துஉள்ளனர்.
மாதம், சராசரியாக, 25 லட்சம் பேர், தங்களுக்கு தகுந்த ஜோடியை தேர்வு செய்வதற்காக, திருமண இணையதளங்களில், விவரங்களை பதிவு செய்கின்றனர்.கடந்த, 2011 – 12 மற்றும் 2012 – 13ம் நிதியாண்டுகளில், வேலை வாய்ப்பு மற்றும் திருமண ஜோடி தொடர்பான, ஆன்-–லைன் விளம்பரங்கள், முறையே, 56 சதவீதம் மற்றும் 52 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.
புதிய தலைமுறையினருக்கு, குறிப்பாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற இணையை தேடுவதற்கும், மணம் முடிப்பதற்கும் ஆன்-லைன் திருமண இணையதளங்கள் உதவுகின்றன. இதனால், லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை உள்ளடக்கியதாக, ஆன்-லைன் திருமண தகவல் இணையதளங்கள் விளங்குகின்றன.
வேலைவாய்ப்பு: கடந்த, 2012–13ம் நிதியாண்டில், 2.50 கோடி பேர், ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு தளங்களில், தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளனர். இது, வரும், 2016–17ம் நிதிஆண்டில், 5 கோடியாக உயரும்.ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பு தேடுவோரில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், டில்லி, தமிழகம், கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
பயணம்: பயண டிக்கெட்டை, ஆன்-லைன் மூலம் பெறுவதும் அதிகரித்து வருகிறது. ரயில்வே பயணச் சீட்டை, ஆன்-லைனில் வாங்குவது, ஆண்டுக்கு, 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.சென்ற ஜூன் மாத நிலவரப்படி, ஆன்-லைன் வாயிலாக, ரயில் பயணத்திற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, 68.10 லட்சமாக உள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 58.30 லட்சமாக இருந்தது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|