பதிவு செய்த நாள்
19 டிச2013
00:42
புதுடில்லி :உள்நாட்டில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, சென்ற நவம்பர் மாதத்தில், 2.33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 51.37 லட்சமாக அதிகரித்துள்ளது.கடந்தாண்டு, இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 50.20 லட்சமாக இருந்தது என, உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் தெரிவித்துஉள்ளது.
இண்டிகோ நிறுவனம்:மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டில் அதிகளவில் விமான பயணிகளை ஏற்றி சென்றதில், இண்டிகோ நிறுவனம், 28.6 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற நவம்பரில் மட்டும், 14.68 லட்சம் விமான பயணிகளை கையாண்டுள்ளது.
இதையடுத்து, ஏர் – இந்தியா நிறுவனம், 9.89 லட்சம் விமான பயணிகளை (19.3 சதவீத பங்களிப்பு) ஏற்றிச் சென்று, இரண்டாம் இடத்தில் உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஜெட் ஏர்வேஸ், 9.52 லட்சம் பயணிகளையும் (18.5 சதவீத பங்களிப்பு), ஜெட்லைட், 2.90 லட்சம் பயணிகளையும் (5.6 சதவீத பங்களிப்பு) கையாண்டுள்ளன. ஒட்டு மொத்த அளவில், இவ்விரு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 24.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இழப்பீடு: சென்ற நவம்பரில், விமானங்கள் ரத்து செய்யப்பட்ட வகையில், 31 ஆயிரம் பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள், 93.62 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளன. விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஆன காரணத்தால், பாதிக்கப்பட்ட, 21 ஆயிரம் பயணிகளுக்கு 18.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
சட்ட விதிமுறைகளின்படி, விமான நிறுவனங்கள், ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தாமதத்திற்கு, 1,000 ரூபாயும், இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமான தாமதத்திற்கு, 4,000 ரூபாயும், பயணிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|