‘ஆன்-–லைன் திருமண சந்தை மதிப்பு ரூ.1,500 கோடியாக உயரும்’‘ஆன்-–லைன் திருமண சந்தை மதிப்பு ரூ.1,500 கோடியாக உயரும்’ ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால்‘சென்செக்ஸ்’ 248 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
00:43

மும்பை: நாட்டின், பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. ரிசர்வ் வங்கியின், நிதி ஆய்வு கொள்கையில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. ‘ரெப்போ விகிதங்கள்’ உயர்த்தப்படலாம் என்று, சந்தை வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜனின் இந்த ஆச்சரியமூட்டும் அறிவிப்பு, முதலீட்டாளர்களுக்கு, புதிய உற்சாகத்தை கொடுத்தது.
இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ 1.20 சதவீதம் மற்றும் ‘நிப்டி’, 1.27 சதவீத உயர்வுடனும் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்கு சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டதுநேற்றைய வியாபாரத்தில், அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் அதிக தேவை இருந்தது. குறிப்பாக, ரியல் எஸ்டேட், பொறியியல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை முறையே, 3.51 சதவீதம், 2.61 சதவீதம், 2.15 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 247.72 புள்ளிகள் அதிகரித்து, 20,859.86 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,197.57 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக. 20,568.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., டாட்டா பவர், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஜிந்தால் ஸ்டீல், சேசா ஸ்டெர்லைட் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 78.10 புள்ளிகள் உயர்ந்து, 6,217.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,236 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,129.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)