பதிவு செய்த நாள்
19 டிச2013
11:08
ஈரோடு: பனிக்காலம் துவங்கியதால், வரத்து குறைந்து, ஒரு முருங்கைக்காய் விலை, 8 முதல், 10 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, முருங்கைக்காய் அதிகமாக வரத்தாகிறது. தற்போது, தமிழகம் முழுவதும், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்தே, காய்கள் செல்கின்றன. ஈரோடு மார்க்கெட்டுக்கு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கள் வரத்தாகி உள்ளன. பனியின் காரணமாக வரத்து குறைந்து, 10 காய் கொண்ட கட்டு, 100 ரூபாய் வரை, விலை உயர்ந்து, விற்பனை மந்தமடைந்துள்ளது.
இதுகுறித்து, மொத்த வியாபாரி குணசேகர் கூறுகையில், ""பனிக்காலத்தில் பூக்கள் உதிர்ந்து, கருகி விடுவதால், காய் பிடிப்பதில்லை. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து மட்டுமே, தற்போது காய் வரத்தாகிறது. ஒரு கட்டு, 70 முதல், 100 ரூபாய் வரை விற்கப்படுவதால், குறைந்தளவு மட்டுமே விற்பனையாகிறது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|