பதிவு செய்த நாள்
19 டிச2013
11:29
காரைக்குடி: ''தமிழகத்தில், அரிசி விலை சீராகவே இருக்கும்'' என, அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார். காரைக்குடியில், அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம், நடந்தது.
சங்க மாநில தலைவர், துளசிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரிசி ஆலைகளுக்கு, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், அரியானா மாநிலங்களிலிருந்து, நெல் வரத்து உள்ளது. ஏ, பி, சி, என்ற அடிப்படையில், 3,500 ஆலைகள் தற்போது இயங்கி வருகின்றன. 1,000 நவீன ஆலைகள் உள்ளன. பிற மாநில நெல் வரத்தை வைத்துத்தான், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. சமீப காலமாக, அரிசி விலை சீராக உள்ளது. வரும் காலத்திலும், இதை போன்றே இருக்கும். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அரிசி விலை குறைவு தான். வறட்சி, வெள்ள காலங்களில் கூட, நெல் வரத்து உள்ளது.
கடந்த ஆண்டு, நெல்லை வாங்கி, பதுக்கி வைத்த புதிய வியாபாரிகள், விலை கிடைக்காததால், இத்தொழிலை விட்டே ஓடி விட்டனர். தற்போதைய சூழ்நிலையில், அரிசி ஆலைகளுக்கு, 120 எச்.பி., திறன் தாழ்வழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால், உயர் அழுத்த மின் இணைப்பு பெற வேண்டியதுள்ளது. இதை, 200 எச்.பி.,யாக, உயர்த்தி தர வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து நெல் வாங்கும்போது, அங்கேயே வரி விதிக்கப்படுகிறது; ஆனால், தமிழகத்திலும் வரி கேட்கின்றனர். உணவு பொருளுக்கு, ஒரு முறை வரி செலுத்தினால் போதுமானது. அப்படி கொண்டு வரும் நெல்லுக்கு, தமிழகத்தில் வரி விதிக்க கூடாது. இவ்வாறு, துளசிங்கம் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|