ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.14 ... தங்கம் விலை ரூ.112 குறைந்தது தங்கம் விலை ரூ.112 குறைந்தது ...
'தமிழகத்தில் அரிசி விலை சீராகவே இருக்கும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
11:29

காரைக்குடி: ''தமிழகத்தில், அரிசி விலை சீராகவே இருக்கும்'' என, அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார். காரைக்குடியில், அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம், நடந்தது.

சங்க மாநில தலைவர், துளசிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரிசி ஆலைகளுக்கு, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், அரியானா மாநிலங்களிலிருந்து, நெல் வரத்து உள்ளது. ஏ, பி, சி, என்ற அடிப்படையில், 3,500 ஆலைகள் தற்போது இயங்கி வருகின்றன. 1,000 நவீன ஆலைகள் உள்ளன. பிற மாநில நெல் வரத்தை வைத்துத்தான், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. சமீப காலமாக, அரிசி விலை சீராக உள்ளது. வரும் காலத்திலும், இதை போன்றே இருக்கும். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அரிசி விலை குறைவு தான். வறட்சி, வெள்ள காலங்களில் கூட, நெல் வரத்து உள்ளது.

கடந்த ஆண்டு, நெல்லை வாங்கி, பதுக்கி வைத்த புதிய வியாபாரிகள், விலை கிடைக்காததால், இத்தொழிலை விட்டே ஓடி விட்டனர். தற்போதைய சூழ்நிலையில், அரிசி ஆலைகளுக்கு, 120 எச்.பி., திறன் தாழ்வழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால், உயர் அழுத்த மின் இணைப்பு பெற வேண்டியதுள்ளது. இதை, 200 எச்.பி.,யாக, உயர்த்தி தர வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து நெல் வாங்கும்போது, அங்கேயே வரி விதிக்கப்படுகிறது; ஆனால், தமிழகத்திலும் வரி கேட்கின்றனர். உணவு பொருளுக்கு, ஒரு முறை வரி செலுத்தினால் போதுமானது. அப்படி கொண்டு வரும் நெல்லுக்கு, தமிழகத்தில் வரி விதிக்க கூடாது. இவ்வாறு, துளசிங்கம் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)